Horai- காதல் சொல்ல ஏற்ற ஓரை, கடன் அடைக்க சிறந்த ஓரை எது தெரியுமா?

ஓரை அறிந்து நடந்தால் நினைத்த காரியம் எளிதில் கை கூடும்.

ஓரை அறிந்து நடந்தால் போரிலும் வெல்லலாம் என்று நம் அரசர்கள் இதை கண்டு வெற்றி பெற்றுஉள்ளனர். இன்றும் இது நடைமுறையில் உள்ளது. தெரியவர்கள் இதை பயன்படுத்தி வாழ்வில் சிறக்க வேண்டுகிறேன். 


ஓரை மற்றும் கிழமை அதிபதிகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். மிக எளியவழியில் கொடுத்துளேன்.  

இரவிலும் ஓரை உண்டு. பகலில் என்ன பலன் தருமோ அதே பலன்கள் தான் இரவிலும் கொடுக்கும். நாம் பிறப்பின் போது வரும் (பிறந்த நேரம்) ஓரை அது அசுப ஓரையாக இருந்தாலும் வாழ்நாளில் நன்மையே தரும் 


மிக முக்கிய குறிப்புகள் கடைசில் கொடுத்துளேன், இதை முழுவதும் படித்து பயன்பெறுக. 


வாருங்கள் செல்லலாம்...  


                      ஓரை           -     கிழமை அதிபதி 
           
                 சூரியன்          -        ஞாயிறு
                 சந்திரன்         -        திங்கள்
                 செவ்வாய்      -        செவ்வாய்
                 புதன்                -       புதன்
                 குரு                    -      வியாழன்
                 சுக்கிரன்         -        வெள்ளி
                 சனி                   -      சனி


சூரியஹோரை 

செய்யவேண்டியவை

சூரியஹோரையில் முடித்திருத்தம், குளித்தல்,

சிவனுக்கு விரதம் இருந்து வழிபடுதல்,

அரசாங்கம் சம்மந்த பட்ட வேலைகளை இந்த ஓரையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

அதாவது இன்டெர்வியூ, அரசாங்க வேலை சம்மந்த பட்ட விண்ணப்பம் இந்த ஓரையில் 
செய்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்

ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வது,

தானம் இந்த ஓரையில் பண்ணுவது சிறப்பு வாய்ந்தது.


செய்யக்கூடாதவை

சூரியஹோரையில் மருந்து உட்கோள்ள கூடாது.

திருமண தம்பதியர்கள் முதல்விருந்து செல்லக்கூடாது.

புதிய வாகனம், தங்கம் வாங்கக்கூடாது

புதியாணிகலன் இந்த ஓரையில் அணியக்கூடாது


சந்திரஹோரை 

செய்யவேண்டியவை

சுபகாரியம் செய்வதற்கு ஏற்ற ஓரை இதுவாகும்.

கேட்டரிங் தொழில் தொடங்கலாம், வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்,

திருமணம் செய்யலாம்காதல் கொள்ளுவதற்கு ஏற்ற ஓரை ஆகும்.

அம்மாவசை மற்றும் அதற்கு அடுத்து வரும் சந்திரஹோரை தவிர்ப்பது நலம்.

செய்யக்கூடாதவை 

தங்கள் ராசிக்கு வரும் சந்திராஷ்ட்ரம் அன்று வரும் சந்திரஹோரையில் சுபகாரியம்  தவிர்த்தல் நலம்

தேய்பிறையில் வரும் வரும் சந்திரஹோரையில் முக்கிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நலம்



 செவ்வாய்ஹோரை (அசுப ஓரை - negative)

செய்யவேண்டியவை

செவ்வாய்ஹோரையில் கடன் அடைக்க சிறந்தது. அல்லது குறைந்த அளவது பணம் எடுத்து 

செவ்வாய்ஹோரையில் கடன் அடைக்க வேண்டும் என்று தனியாக சேமித்து வைத்தால் 

விரைவில் கடன் அடைக்க செய்யவது இந்த ஹோரையின் சிறப்பாகும்.  முக்கியமாக செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய்ஹோரையில் கடன் அடைப்பது மிகச்சிறப்பாகும்.

செய்யக்கூடாதவை

இந்த ஹோரையில் பயணம் தொடங்க கூடாது (start)

புதியது எதும் வாங்கக்கூடாது, பத்திரப்பதிவு செய்யக்கூடாது,

கடன் வாங்கவே கூடாது 

புதன் ஓரை

செய்யவேண்டியவை

இந்த ஹோரையில் சுபகாரியம் செய்யலாம்.

கல்விக்கு சிறந்த ஹோரையாகும். படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கும் குழந்தை அல்லது 

படிக்க கடினமான பாடத்தை இந்த ஹோரையில் படித்தால் எளிதாக விளங்கும்.

கவிதை, சிந்தனை, ஆராய்ச்சி, புதிய தொழில் தொடங்க, வேலையில் சேர இந்த ஹோரை மிக சிறப்பாகும்.

புதிய  வங்கி கணக்கு தொடங்கலாம்.




குரு ஓரை- சுபஓரை 


செய்யவேண்டியவை

திருமணம் சார்ந்த பேச்சுக்கள், திருமண நிகழ்ச்சிகள் இதில் தொடங்கலாம் 

புதிய ஆடை அணிகலன்கள் வாங்கலாம், 

வியாழக்கிழமையில் வரும் குருஓரை மிக சிறந்தது 

வியாழக்கிழமையில் வரும் குருஓரையில் கடன் வாங்க சிறந்தது 

செய்யக்கூடாதவை

வெள்ளிக்கிழமையில் வரும் குருஓரையில் நல்ல நிகழ்ச்சிகள் செய்யவது தவிர்த்தல் நலம். 
ஏனெனில் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கமிக்க நாள். 

சுக்கிரன்ஓரை


திருமணம் சார்ந்த, காதல் சார்ந்த விஷயத்தில் முயற்சி செய்தல் பலன்கிடைக்கும் 

காதல் சொல்ல ஏற்ற ஓரை இதுவாகும். 

பெண்களின் மூலம் காரியம் நடக்க, அதாவது உயர் அதிகாரி பெண்ணாக இருந்தால் அல்லது ஒரு முக்கியமான வேலை நடக்க வேண்டும் என்று சென்றால் அங்கு பெண்அதிகாரி இருந்தால் இந்த ஓரையில் அவர்களிடம் கேட்டால் உடனே நடக்கும்.

இந்த ஓரையில் கார், இருசக்கர வாகனம் வாங்கலாம், 

புதிய வங்கி கணக்கு தொடங்கலாம் 

மிக நல்ல ஓரை ஆனால் வியாழக்கிழமையில் வரும் சுக்கிரன்ஓரை தவிர்க்கவும். 

சனி ஓரை 

எந்த சுப நிகழ்ச்சிகளும் பண்ணக்கூடாது 

நிலம் சமந்த பட்ட தொழில் உள்ளவர்கள் Real estate இதில் விற்க சிறந்தது. 

மண் சார்ந்த நிகழ்ச்சிகள் செய்யலாம். (மண்வெட்டுதல்)

மிக முக்கிய குறிப்புகள் 

ராகு காலத்தில் வரும் சுப ஓரை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் 

குல தெய்வத்தை சுக்கிரன், புதன், சந்திரன் சூரிய ஓரையில் வழிபடலாம். 

கடவுளை வழிபட குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஓரை சிறந்தது. 

ஞாயிறு கிழமையில் வரும் சனி ஓரை, சனி கிழமையில் வரும் சூரிய ஓரை மீகுதியான தூர் பலன்களை தரும் 



செவ்வாய், சனி ஓரையில் பயணம் தொடங்க கூடாது. (தொடங்கிய பயணத்தில் வரும் இந்த ஓரை பற்றி கவலை இல்லை. இந்த ஓரையில் தொடங்குதல் கூடாது)

https://kalanchiyamhunt.blogspot.com/2019/07/why-am-need-to-understand-cosmic-power.html

Post a Comment

0 Comments